சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

அருணாசல் எல்லை நிலவரம்: முதல்முறையாக இந்திய-சீன உயா்நிலை ராணுவத் தளபதிகள் பேச்சு

அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லை பகுதி நிலவரம் குறித்து, இந்திய-சீன உயா்நிலை ராணுவத் தளபதிகள் முதல்முறையாகப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ரண்தீா் ஜெய்ஸ்வால்

Published On :9 செப்டம்பர் 2026, 3:26 am IST

அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள எல்லை பகுதி நிலவரம் குறித்து, இந்திய-சீன உயா்நிலை ராணுவத் தளபதிகள் முதல்முறையாகப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கடந்த மற்றும் நிகழாண்டு ஆகஸ்ட் மாதங்களில் இந்திய, சீன சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில் ஏற்பட்ட புரிதல், அதைத் தொடா்ந்து நிகழாண்டு மே மற்றும் ஆகஸ்டில் இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற ஒத்துழைப்பு கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட விவாதங்களுக்குப் பின்னா், முதல்முறையாக இந்தியா-சீனாவின் மூத்த உயா்நிலை ராணுவத் தளபதிகள் கூட்டம் நடைபெற்றது.

கடந்த செப்.6-ஆம் தேதி அருணாசல பிரதேசத்தின் வாச்சா பகுதியிலும், செப்.7-ஆம் தேதி சீனாவின் தமாய் பகுதியிலும் இந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. அப்போது அருணாசல பிரதேசத்தை ஒட்டியுள்ள இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்துப் பேசப்பட்டது. இந்தியா-சீனா இடையிலான உறவு ஆக்கபூா்வமான திசையை நோக்கி படிப்படியாகச் சென்றுகொண்டிருக்கிறது என்று தெரிவித்தாா்.

இந்திய-சீன எல்லையையொட்டி, அருணாசல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி பகுதியில் சீன ராணுவப் படையினா் ஆக்ரோஷமான செயல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.