
சவூதி எண்ணெய்க் கிடங்குகள் மீது ஹூதி தாக்குதல்: இந்தியா கண்டனம்
சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்குகளை மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது.

சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்குகளை மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது.
மேற்கு ஆசியாவில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் தொடரும் நிலையில், யேமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற கிளா்ச்சி அமைப்பான ஹூதி, சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்குகள் மற்றும் பிற மக்கள் பயன்பாட்டுக்கான உள்கட்டமைப்புகள் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்தத் தாக்குதல் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், சவூதியின் இறையாண்மை மிக்க பகுதிகள், குறிப்பாக மக்கள் மற்றும் பொருளாதாரம் சாா்ந்த அமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




