32. தடுக்காத ஊசி மருந்துகள்! - 3

தடுப்பூசி மருந்துகளால் நோயைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், அவை புதிய பாதிப்புகளை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்துவதுதான் கொடுமை.

மனிதகுலம் செய்யும் ஆகப்பெரிய பாவம் வேக்ஸினேஷன் கொடுப்பதுதான். இதை இனிமேல் பொறுத்துக்கொள்ளவே முடியாது. ஒழித்தே ஆக வேண்டும்.

- டாக்டர் ஆண்ட்ரூ மூல்டன்

தடுப்பூசிகள் போடுவதாலும் தடுப்பு மருந்துகள் கொடுப்பதாலும் ஏற்படும் விளைவுகளைக் கொஞ்சம் பார்த்தோம். இந்தியாவில் நடந்தது என்ன என்பதைப் பற்றியும் வேக்ஸின்களால் ஏற்படும் உச்சபட்ச விளைவு என்ன என்பது பற்றியும் இப்போது பார்க்க இருக்கிறோம். பார்க்கலாமா?

இந்தியாவில் நடந்தது என்ன?

சில வருடங்களுக்கு முன்னர் அஸ்ஸாமில் போலியோ சொட்டு மருந்து கொடுத்த பின் 10 குழந்தைகள் இறந்தன. 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டன.

2002-ல் உ.பி.யில் போலியோ சொட்டு மருந்து கொடுத்தவுடன் 26 குழந்தைகளுக்குப் போலியோ ஏற்பட்டது. இந்திய அரசின் கோரிக்கையின் பேரில் உலக சுகாதார நிறுவனம் (WHO) நிகழ்த்திய பரிசோதனையில், போலியோ சொட்டு மருந்தில் 17 வகை கலப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு வழக்கம்போல் அந்த விஷயம் மறக்கப்பட்டது என்கிறார் உமர்!

இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவர் டாக்டர். ஜேக்கப் புலியேல், ஒரு ஆங்கில நாளிதழில் எழுதிய கட்டுரையில் 2006-ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்ததனால், இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் உள்ளது என்றும் கூறினார்.

டாக்டர். ஜேக்கப் புலியேல்

2008 மே மாதம், போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஏழு மாவட்டங்களில் பத்து குழந்தைகள் இறந்தன. ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் தடுப்பு மருந்தின் பக்கம் திரும்பியது. அச்சம்பவத்தை ஆராய மத்தியக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடைசியில், ‘மருந்துகளில் பிரச்னையில்லை, அக்குழந்தைகள் தடுப்பூசியினால் இறக்கவில்லை. வேறு நோய்கள் ஏற்கெனவே இருந்திருக்கலாம்’ என்று சொல்லப்பட்டது.

இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர். சத்யமாலா, தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் இப்படியான மரணங்கள் எங்கு நிகழ்ந்தாலும் வழக்கமான இதே வரிகளோடு அவை மறக்கப்படுகின்றன (தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள், பக்கம் 23).

தடுப்பூசி மருந்துகளால் நோயைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், அவை புதிய பாதிப்புகளை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்துவதுதான் கொடுமை. தடுப்பூசி மருந்துகள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கருத்துகள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

நான்கு கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு ஒரு நாளில் ஒரு தடுப்பூசி போடுவது 40 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 40 தடுப்பூசிகள் போடுவதற்குச் சமம்! அப்படியானால், விளைவுகளை நீங்களே கற்பனை செய்து பார்க்கலாம். ஆனால் வேக்ஸின் தயாரிக்கும் கம்பெனிகள் ஏதாவது எச்சரிக்கை கொடுக்கின்றனவா? ஆம். கொடுக்கின்றன!

ஒவ்வொரு தடுப்பூசி மருந்தோடும் அந்த மருந்து பற்றிய எச்சரிக்கை குறிப்பு ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக டிஃப்தீரியா (தொண்ட அழற்சி நோய்), கக்குவான் இருமல் மற்றும் டெடனஸ் எனப்படும் இசிவு ஆகிய மூன்றையும் தடுப்பதற்காகக் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படும் DPT அல்லது DPT என்று அறியப்படும் தடுப்பூசியோடு ஒரு எச்சரிக்கை அறிக்கையும் தரப்படும். ஆனால், இதை நாம் யாரும் பார்த்திருக்கமாட்டோம். அவ்வளவு கவனமாக நாம் எப்போதுமே இருப்பதில்லை. டாக்டரும் நமக்கு அதைக் காட்டமாட்டார். சரி, அப்படி அதில் என்ன இருக்கும்? கீழே படித்துப் பாருங்களேன்:

1. அதிகப்படியான காய்ச்சல் (1050 அல்லது அதற்கு மேல்)

2. மந்தமாக இருத்தல்

3. நீடித்த அசதி

4. விட்டு விட்டு ஏற்படும் அலறல்

5. மூளை வளர்ச்சிக் குறைபாடு

6. அதிகப்படியான துறுதுறுப்பு

7. எப்பொழுதாவது வலிப்பு

8. மூளை பாதிப்பு

9. மயக்கம்

10. கண் நரம்புக் கோளாறுகள்

11. நரம்பு சம்பந்தமான நிரந்தரக் கோளாறுகள் அல்லது மனநலக் குறைபாடு

இப்படி ஒவ்வொரு தடுப்பூசி மருந்துடனும் வெவ்வேறு வகையான எச்சரிக்கைக் குறிப்புகளை இணைத்துத்தான் உலகம் எங்கும் விற்கப்படுகின்றன.

கீழ்க்கண்ட கொடூரமான ரசாயன விஷங்கள் ஒவ்வொரு தடுப்பூசியிலும் உள்ளன. உலகில் தயாரிக்கப்படும் 74 வகையான தடுப்பூசி மருந்துகளிலும் இந்த ரசாயன நஞ்சுகள் அடங்கியுள்ளன. இந்த விஷங்களை நாம் நேரடியாக ரத்தத்தில் ஏற்றுகிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. நம் குழந்தைகள் ஆறு வயதைத் தொடும்போது இவை அனைத்தும் பரிசாகக் கிடைக்கிறது. இந்த அட்டவணையைக் கொஞ்சம் பாருங்கள்.

ரசாயன நஞ்சுகள்

பாதிப்படையும் பகுதிகள்

அம்மோனியம் சல்ஃபேட்
வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்
லாடெக்ஸ் ரப்பர்
திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு
எம்.எஸ்.ஜி.
பிறவிக் கோளாறு மற்றும் ஒவ்வாமை
அலுமினியம்
அலிமியர்ஸ் நோய், டிமென்ஷியா, வலிப்பு, கோமா
ஃபார்மால்டிஹைட்
மூளை மற்றும் குடல் புற்றுநோய்
பாலிசோர்பேட் 60
நிரூபிக்கப்பட்ட புற்றுநோய்க் காரணி
டிரைபுடைல் பாஸ்பேட்
சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகள்
குளுதரால்டிஹைட்
பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும்
ஜெலடின், ஜெந்தாமைசின் சல்பேட் மற்றும் பாலிமைக்சின் பி
ஒவ்வாமை
பாதரசம்
 
வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் குறிப்பிடப்படுவது. மூளை, நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும். தொப்புள் கொடி வழியாகக் கருவில் வளரும் சிசுவை அடையும்.
நியோமைசின் சல்பேட்
சத்துகள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும், வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தும்
கார்பாலிக் அமிலம்
செல்களை பாதிக்கும் விஷம்
எதிலின்கிளைகால்/ பினோஜைதனால் போரக்ஸ்
எறும்புகளைக் கொல்லப் பயன்படும் விஷம்

இதெல்லாம் போதாதென்று, இவற்றோடு பாதிக்கப்பட்ட மனித, மிருக செல்களும் தேவைக்கேற்ப(!) சேர்க்கப்படுகின்றன. கருச்சிதைவு ஏற்பட்ட சிசுவின் திசுக்கள், பன்றி, ஆடு, குதிரைகளின் ரத்தம், முயலின் மூளைத் திசு, நாயின் சிறுநீரகப் பகுதிகள், பசுவின் இதயத் திசுக்கள் போன்றவையும் தடுப்பு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன!

வேக்ஸின் இறப்புகள் - சில தகவல்கள்

சரி, இதெல்லாம் இருக்கட்டும். தடுப்பூசியால் ஏற்படும் உச்சபட்ச விளைவாகக் குறிப்பிடப்படுவது எது தெரியுமா? SIDSதான். SIDS என்றால் Sudden Infant Death Syndrome! அதாவது, குழந்தை திடீரென இறந்துபோய்விடும் என்பதைத்தான் டெக்னிகலாகச் சொல்கிறார்கள். நவீன கொலைகாரர்கள்!

இந்தத் தொடர்பில், சுற்றுச்சூழல் நலனுக்கான மருத்துவக் குழுவின் உறுப்பினர் டாக்டர் புகழேந்தி, தடுப்பூசி பற்றிக் கூறுவது கருத்தில் கொள்ளத்தக்கது:

‘ஒவ்வாமை காரணமாக எந்தத் தடுப்பு மருந்தும் இறப்பு உள்ளிட்ட பின்விளைவுகளை ஏற்படுத்த முடியும். அமெரிக்காவில் திம்மர்சால் வேதிப்பொருள் கலந்த தடுப்பூசிகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து புழக்கத்தில் உள்ளது பற்றி அரசோ, மருத்துவர்களோ பேசுவதில்லை. தடுப்பூசி மருந்தில் கலப்படம் ஏற்பட்டாலோ அல்லது மருந்தின் திறனைக் காப்பதற்காகச் சேர்க்கப்படும் (preservatives) வேதிப்பொருட்கள் வினை புரிந்தாலோ இறப்பு நிகழும் அபாயம் இருந்துகொண்டே இருக்கிறது என்பதை மருத்துவர்களும், பத்திரிகைகளும் வெளியிடுவதில்லை. மருந்துச் சந்தையின் பணம் காய்க்கும் மரமாக இருப்பது தடுப்பூசி. அதைப்பற்றி இப்போதாவது மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்’.

வேக்ஸின்கள் போட்டதால் ஏற்பட்ட சில மரணங்கள்

• 1870 – 71-களில் அம்மை நோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை குத்திக் கொண்டவர்கள்!

• அமெரிக்கக் குழந்தைகளில் வாரத்துக்கு மூன்று பேர் தடுப்பூசியினால் இறக்கிறார்கள் என்று பெடரல் கவர்மென்ட் அறிக்கை கூறுகிறது.

• சாதாரண நிலையில் கக்குவான் இருமலால் இறப்பவர்கள் ஆண்டுக்குப் பத்துப் பேர்தான். கக்குவான் இருமலுக்கான தடுப்பூசிக்குப் பிறகு ஆண்டுக்கு 950 பேர் கக்குவான் இருமலால் இறக்கிறார்கள்.

• 2008. சென்னை திருவள்ளூர் அருகே நடந்த தடுப்பூசி முகாமில் தட்டம்மை தடுப்பூசி போட்டதில் நான்கு குழந்தைகள் இறந்தன. பெற்றோர்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய்கள் இழப்பீடு கொடுக்கப்பட்டது.

• 2016. சென்னை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராமாராவ் என்பவரின் மூன்று மாத பெண் குழந்தை தனுஜாஸ்ரீக்கு, ஓட்டேரியில் உள்ள மாநகராட்சி சுகாதார நிலையத்தில் மஞ்சள்காமாலை, ரனஜன்னி உள்ளிட்ட ஐந்து விதமான நோய்களில் இருந்து பாதுகாப்பதாகச் சொல்லப்படும் பென்ட்டாவாலன்ட் என்ற தடுப்பூசி போடப்பட்டது. ஊசி போட்ட சில நிமிடங்களில் குழந்தை இறந்துபோனது.

• தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபாகரன் - பரணி தம்பதியரின் ஆண் குழந்தைக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது. கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுக் குழந்தை இறந்தது.

• சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டதால் இரண்டு குழந்தைகள் இறந்தன. உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

• 2008. திருவள்ளூர் அருகேயுள்ள பென்னலூர்பேட்டை அங்கன்வாடி மையத்தில், கச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக நடந்த தட்டம்மை தடுப்பூசி முகாமில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட நான்கு குழந்தைகள் இறந்தன.

• 2008. சென்னை, அயனாவரம் மாநகராட்சி மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்ட ஐந்து மாத ஆண் குழந்தை சூர்யா இறந்துபோனான். குழந்தையின் தந்தை ராஜ்குமார், ஒரு தொலைக்காட்சித் தொடர் நடிகர்.

• அமெரிக்காவில் பத்தாண்டுகளில் (2004-15) தட்டம்மை வந்து ஒரு குழந்தையும் சாகவில்லை. ஆனால், தட்டம்மை தடுப்பூசி போட்டு 108 குழந்தைகள் இறந்துள்ளன என்கிறது ஒரு அறிக்கை.

முடிவாக -

வேக்ஸின்கள் எனப்படும் தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசிகளோ நோய்களிலிலிருந்து குழந்தைகளைப் பாதுக்காப்பதில்லை. இதுவரை பாதுகாத்ததும் இல்லை. அவற்றால் பலன் ஏதும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், உயிருக்கே அபாயம் இருக்கிறது. உயிர் போகாமல் பிழைத்துக்கொள்ளுமானால், வெகுநுட்பமான முறையில் குழந்தையின் ஆரோக்கியத்தை வேக்ஸின்கள் பாதிக்கின்றன. பல சிக்கல்களை வாழ்நாள் முழுவதும் ஏற்படுத்திவிடுகின்றன. ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஊனமாகிப்போனதை வரலாறு காட்டுகிறது. நல்ல ஆரோக்கியமாக இருக்கும் குழந்தையை வாழ்நாள் நோயாளி ஆக்குவதே இந்த வேக்ஸின்கள்தான்.

வேக்ஸினேஷன் என்பது 1700-களில் தொடங்கிய இயல்புக்கு மாறான, இயற்கைக்கு விரோதமான ஒரு மருத்துவ நடைமுறை. விஷத்தன்மை கொண்ட ரசாயனக் கூட்டத்தை உடலுக்குள் அவை அனுப்புகின்றன. பெரியம்மை, கேன்ஸர், மூளைவளர்ச்சி பாதிப்பு, போலியோ என எல்லா நோய்களையும் அது உண்டாக்குகிறது. நமது தோல் போன்ற தடுப்புச் சுவர்களைத் தாண்டி நேரடியாக வேக்ஸின்களில் உள்ள வேதிப்பொருள்கள் நம் ரத்தத்தில் கலக்கின்றன. அவற்றின் நோக்கமே நம் மூளையையும் உள்ளுறுப்புகளையும் அபாயத்துக்குத் தள்ளுவதுதான்.

எத்தனை குழந்தைகள் வேக்ஸின் போட்டதால் இறந்துபோயின என்ற உண்மையான கணக்கு நமக்கு இதுவரை தெரியாது. ஏனெனில், ஒரு வேக்ஸின் கொடுக்கப்பட்டதால் மருத்துவமனையில் ஒரு குழந்தை இறந்துபோனால், இறப்புச் சான்றிதழில் ‘தடுப்பூசி சாவு’ என்று எந்த மருத்துவரும் எழுதுவதில்லை! அதற்குப் பதிலாக, புரியாத பாஷையில், அவர்களைக் காப்பாற்ற உதவும் சொற்களில் crib death அல்லது SIDS என்று எழுதுவார்கள். தூக்கிக்கொண்டு போய், தடுப்பூசி போட்டு, அதனால் குழந்தை உடனேயோ மறுநாளோ இறந்துபோனால், பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தினால்தான் விஷயம் வெளிச்சத்துக்கு வரும். இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கும் உண்மையாகும்.

வேக்ஸினேஷன் என்பது ஒரு வளைவுக் கோடு மாதிரி. அதன் ஒரு முனையில் இருக்கும் சிறுபான்மையினர், வேக்ஸினேஷனால் இறந்தவர்கள் அல்லது மிகக்கடுமையான பாதிப்புக்கு உள்ளானவர்கள். பெரும்பான்மையினர், வளைவுக்கோட்டின் மையத்தில் இருக்கிறார்கள். அவர்களும் மெள்ள மெள்ள வளைவின் முனையை நோக்கித்தான் வந்துகொண்டிருக்கிறார்கள். தலைவலி, எரிச்சல், கண்பார்வைக் கோளாறு, அலர்ஜி, ஆஸ்துமா போன்ற சிறு தொந்தரவுகளுடன். அத்தொந்தரவுகள் யாவும் வேக்ஸினேஷன் செய்துகொள்வதற்கு முன் இருந்திருக்காது. இதனை The Bell Curve என்று வர்ணிக்கிறார் டாக்டர் டெட் கோரன். Childhood Vaccination என்றொரு அருமையான நூலை இவர் எழுதியிருக்கிறார். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

ஒரு குழந்தை பிறக்கு முன்பே placenta எனப்படும் பனிக்குடத்தின் மூலம் எதிர்ப்பு சக்தியை அதற்குத் தாய் கொடுக்கிறாள். அது குழந்தைப் பருவத்தில் இருக்கும்போது வரக்கூடிய பொன்னுக்கு வீங்கி, தட்டம்மை, சின்னம்மை, கக்குவான் இருமல் போன்ற வியாதிகளை எளிதில் எதிர்கொண்டு வெற்றிகண்டு ஆரோக்கியத்தை நிலை நாட்டும். ஆனால், இந்த வேக்ஸின்கள் எதிர்ப்பு சக்தியைக் காலி செய்கின்றன. குழந்தைப் பருவத்தில் சாதாரணமாக வரக்கூடிய நோய்களெல்லாம் பிறந்த குழந்தைக்கும், கைக்குழந்தைக்கும், வளர்ந்தவர்களுக்கும் வருமாறு செய்கின்றன. ஒரு தாய் கொடுக்கும் transplacental immunity வேலை செய்யவிடாமல் வேக்ஸின்கள் தலையிடுகின்றன.

ஒரு பெண் குழந்தைக்கு வேக்ஸின் செய்துவிட்டால், அது வளர்ந்து அதற்கொரு குழந்தை உண்டாகும்போது, தன்னுள்ளே இருக்கும் அக்குழந்தையின் எதிர்ப்பு சக்தியை அவளால் தன் பனிக்குடத்தின் மூலம் ஆற்றல்மிக்கதாக மாற்றமுடியாமல் போய்விடும். அதனால்தான், குழந்தைகள் தட்டம்மையோடும் கக்குவான் இருமலோடும் பிறக்கின்றன. தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் தாய் இருந்தால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அந்தநிலையில், அப்படியான நோய்கள் வருவது அக்குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

விஞ்ஞானம் விஞ்ஞானப்பூர்வமாக இல்லை என்பதையே வேக்ஸின்களின் வரலாறும் பயன்பாடும் காட்டுகிறது. மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்துக் கம்பெனிகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் – கோழிக்குஞ்சுகளுக்குத் துணையாக ஓநாய்களா? யோசியுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com