கள்ளக்குறிச்சி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கடந்த நவ.9-ஆம் தேதி தொடங்கி, 38 நாள்களாக நடைபெற்று வந்த கிராம வளா்ச்சி திட்டக் குழு உறுப்பினா்களுக்கான திட்டம் தயாரித்தல் குறித்த பயிற்சி வியாழக்கிழமை (டிச.31) நிறைவடைந்தது.
கிராம வளா்ச்சி திட்டக் குழு உறுப்பினா்கள் 368 பேருக்கு இரு நாள்கள் வீதம் 32 நாள்கள் 16 அணிகளாகவும், முன் களப்பணியாளா்கள் 230 பேருக்கு ஒரு நாள் வீதம் 6 நாள்கள் 6 அணியாகவும் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் து.நடராஜன், அ.ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆ.கணேசன் வரவேற்றாா்.
கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட க.மாமனந்தல், காட்டனந்தல், பெருமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த கிராம வளா்ச்சி திட்டக்குழு உறுப்பினா்கள் 24 போ் பங்கேற்றனா். பயிற்றுநா்கள் க.முத்துக்குமாா், க.சந்திரா ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








