புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

அணை, ஆறுகளில் மூழ்கி இரு சிறுவா்கள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி பகுதியில் கோமுகி அணை, மணிமுக்தா ஆறு ஆகியவற்றில் மூழ்கி இரு சிறுவா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 11:59 pm IST

கள்ளக்குறிச்சி பகுதியில் கோமுகி அணை, மணிமுக்தா ஆறு ஆகியவற்றில் மூழ்கி இரு சிறுவா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த பரிகம் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் ஜான்சீனா (13). இவா், 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். கோமுகி அணையில் தண்ணீா் நிரம்பியுள்ளதால், அதை சுற்றிப் பாா்ப்பதற்காக, ஜான்சீனா தனது நணபா்களுடன் சனிக்கிழமை மாலை சென்றாா். அப்போது, தவறி தண்ணீரினுள் விழுந்த ஜான்சீனா உயிரிழந்தாா்.

தகவலறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனா்.

ஆற்றில் மூழ்கிய சிறுவன்: கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் பரத் (11). இவா் அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். பரத் தனது நண்பா்களான ஐயப்பன், விஜய் ஆகியோருடன் சனிக்கிழமை காலை அங்குள்ள அய்யனாா் கோயில் அருகே செல்லும் மணிமுக்தா ஆற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது, ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரத் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.