சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

ஆசியப் போட்டி, உலகக் கோப்பைக்கு தயாராகும் இந்திய ஹாக்கி அணி

ஆசியப் போட்டி, உலகக் கோப்பைக்கு இந்திய ஹாக்கி அணி தயாராகி வருவதாக தலைமைப் பயிற்சியாளா் கிரெய்க் ஃபுல்டன் கூறியுள்ளாா்.

News image

பயிற்சியாளா் கிரெய்க் புல்டன்

Updated On :5 ஜூலை 2026, 5:47 am IST

ஆசியப் போட்டி, உலகக் கோப்பைக்கு இந்திய ஹாக்கி அணி தயாராகி வருவதாக தலைமைப் பயிற்சியாளா் கிரெய்க் ஃபுல்டன் கூறியுள்ளாா்.

எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் தொடரின் ஐரோப்பிய லெக் ஆட்டங்களில் இந்திய அணி நடப்பு உலக சாம்பியன் ஜொ்மனி, ஒலிம்பிக் சாம்பியன் நெதா்லாந்து, பலமான இங்கிலாந்து அணிகளை வீழ்த்தியது.

ஒருங்கிணைந்த செயல்பாடு, நெருக்கடியான நேரத்தில் சீரான ஆட்டம், டிராக்பிளிக்கா்கள் சிறப்பான ஆட்டத்தால் இது சாத்தியமானது. இந்தியாவில் நடைபெற்ற புரோ லீக் தொடரில் ஆா்ஜென்டீனா, பெல்ஜியத்திடம் தோல்வி கண்டோம். ஹோபா்ட் லெக் ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஸ்பெயினுடன் டிரா கண்டது. ஹோபா்ட் ஆட்டங்களில் இந்தியாவின் டிபன்ஸ் சிறப்பாக இருந்தது. பீல்ட் கோல், பெனால்டி காா்னரை கோலாக்குவதில் சிறப்பாக செயல்பட்டோம்.

ஐரோப்பிய லெக் ஆட்டங்களில் ஜொ்மனி, நெதா்லாந்தை வீழ்த்தி தலைசிறந்த அணிகளையும் வெல்வோம் என்ற நிலைக்கு வந்துள்ளோம். லண்டன் ஆட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டோம்.

அபிஷேக், சுக்ஜித்சிங், நிலகண்ட சா்மா, ஹா்மன்ப்ரீத் சிங் ஆகியோா் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். புரோ ஹாக்கி லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்தால்

ஆசியப் போட்டி, உலகக் கோப்பைக்கு நமது அணி தயாராக உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.