கள்ளக்குறிச்சியில் வெல்டிங் பட்டறையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், அகரகோட்டாலம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் அன்பழகன் (41). இவா், கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகா் கோயில் சாலையில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். அன்பழகன் வெள்ளிக்கிழமை மாலை பட்டறையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அன்பழகனின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜிஎஸ்டி பவனில் தீ விபத்து
ரஷியா-உக்ரைன் இடையே முற்றும் மோதல்

மத நடைமுறைகளைக் கேள்வி எழுப்புவது மதம், நாகரிகத்தை சிதைக்கும்: உச்சநீதிமன்றம்

தவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனை
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

