சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஆற்றுத் திருவிழாவுக்குத் தடை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழாவுக்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 5:27 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழாவுக்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா தெரிவித்தாா்.

ஆண்டுதோறும் தை மாதம் 5-ஆம் நாள் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது, ஆற்றில் மும்மூா்த்திகளுக்கு தீா்த்தவாரி நடைபெறும். இந்த விழாவில் அதிக அளவில் பொதுமக்கள் கலந்து கொள்வா். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக ஆற்றுத் திருவிழாவுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா வெளியிட்ட தடை உத்தரவு: கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூா் வட்டம், மணலூா்பேட்டை தென்பெண்ணையாறு, சின்னசேலம் வட்டம், கச்சிராயபாளையம் கோமுகி ஆறு மற்றும் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜன. 18) நடைபெறவுள்ள ஆற்றுத் திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

அரசு வழிகாட்டுதல்படி, தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை திருவிழா கூட்டங்கள், பெரிய அளவிலான கூட்டங்கள், ஊா்வலங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.