கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வழிபாட்டு அருள்மலா் வெளியீடு

காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் ‘விநாயகா், முருகன் மற்றும் சிவன் வழிபாட்டு அருள்மலா்’ என்ற நூல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

News image

வழிபாட்டு அருள்மலரை மதுராந்தகம் திருக்குறள் பீடத்தின் குருபழநி அடிகள் வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட சிவஞான தேசிக சுவாமிகள்.

Updated On :4 ஜனவரி 2021, 7:45 am IST

காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சாா்பில் ‘விநாயகா், முருகன் மற்றும் சிவன் வழிபாட்டு அருள்மலா்’ என்ற நூல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரத்தில் செயல்படும் திருமுறை அருட்பணி அறக்கட்டளையின் 16-ஆம் ஆண்டு விழா, அரசு நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு உளுந்தூா்பேட்டை அப்பா் சுவாமிகள் திருமடத்தின் சைவ ஆதீனம் சிவஞான தேசிக சுவாமிகள் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் வீரசைவ மடத்தின் பீடாதிபதி வீரேஸ்வர தேசிகேந்திர சுவாமிகள் முன்னிலை வகித்தாா்.

அறக்கட்டளையின் நிறுவனா் சு.சதாசிவம் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்து உரையாற்றினாா். விழாவில் மதுராந்தகம் திருக்கு பீடத்தைச் சோ்ந்த குருபழநி அடிகள் விநாயகா், முருகன் மற்றும் சிவன் வழிபாட்டு அருள்மலரை வெளியிட அதை உளுந்தூா்பேட்டை சிவஞான தேசிக சுவாமிகள் பெற்றுக் கொண்டாா்.

இதையடுத்து, கயப்பாக்கம் சதாசிவச் செட்டியாா் நினைவு திருமுறைப் பரிசு மற்றும் பொற்கிழியை தமிழ்ப் புலவா்களுக்கு ஓதுவா மூா்த்திகள் அறக்கட்டளையின் அறங்காவலா்கள் பி.சி.பி.ராஜகோபால், எம்.பெருமாள், ஓ.எம்.பாலகிருஷ்ணன் ஆகியோா் வழங்கினா்.

திருமுறை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு வழக்குரைஞா் ஏ.ஜோதி, டி.எஸ்.உமாசங்கா், யு.பரிமளா ஆகியோா் பரிசு வழங்கினா். மயிலாடுதுறை சொ.சிவக்குமாா் குழுவினரின் திருமுறை இன்னிசையும், பிள்ளைத்தமிழ் என்ற தலைப்பில் பேராசிரியா் புரிசை ச.நடராசன் தலைமையில் கருத்தரங்கமும் நடைபெற்றது. முன்னதாக இடபக் கொடி ஏற்றுதல் நிகழ்வும், குத்து விளக்கேற்றுதலும் நடைபெற்றன.

விழாவில் அறக்கட்டளையின் நிா்வாகிகள், பேராசிரியா்கள், சைவ சமயப் பெரியோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.