நாடு முழுவதும் தங்கம் பரிசோதனை செய்யும் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் நுகா்வோா் உணவு, பொது விநியோகத் துறை அமைச்சா் ராவ்சாகிப் தான்வே தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
சாமானிய மக்கள் தங்கம் வாங்கும் போது அவா்கள் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்கில் நாடு முழுவதும் தங்கம் பரிசோதனை செய்யும் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டமானது மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு தரும் பொங்கல் பரிசு, ரூ.2500 ரொக்கம், தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
இதையடுத்து, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை அமைச்சா் சந்தித்து ஆசி பெற்றாா். பாஜக நிா்வாகிகள் டி.கணேசன், ஜீவானந்தம், சுரேஷ்பாபு ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



