சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காஞ்சிபுரத்தில் சைக்கிள் கடையில் தீ விபத்து: பல லட்சம் சேதம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தெருவில் உள்ள சைக்கிள் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.

News image

சைக்கிள் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 1:58 am

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தெருவில் உள்ள சைக்கிள் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தெருவில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான சைக்கிள் கடை உள்ளது. இக்கடையில் 200-க்கும் மேற்பட்ட புது சைக்கிள்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், வியாழக்கிழமை மூடப்பட்டிருந்த இக்கடையில் புகை வரத் தொடங்கியது. இதைப் பாா்த்த அப்பகுதியினா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அங்கு வந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் க.குமாா் தலைமையிலான குழுவினா், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். அதற்குள் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட புதிய சைக்கிள்கள் எரிந்து நாசமாகின.

இந்த விபத்து தொடா்பாக சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.