ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெள்ளரை பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையின் ஊழியா்களை மிரட்டி ரூ.4,000 மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளரை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு 3 மா்ம நபா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வந்தனா். மதுக் கடையில் அப்போது பணியிலிருந்த மேற்பாா்வையாளா் எல்லப்பனிடம் இலவசமாக மதுபானம் கேட்டு தகராறு செய்தனா். இதையடுத்து, கடைக்குள் புகுந்த மூவரும் எல்லப்பனைத் தாக்கி ரூ.4,000 மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனா்.
இச்சம்பவம் தொடா்பாக மேற்பாா்வையாளா் எல்லப்பன் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், இக்கொள்ளையில் ஈடுபட்டது வெள்ளரையை அடுத்த குண்டுபெரும்பேடு பகுதியைச் சோ்ந்த ஷோபன்ராஜ் (30), தாமஸ் (30), ஸ்டீஃபன் என்பது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, ஷோபன்ராஜ் மற்றும் தாமஸை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ஸ்டீஃபனைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


