தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

நட்டாலம் தேவசாகயம் பிள்ளை ஆலயத் திருவிழா நாளை தொடக்கம்

கருங்கல் அருகேயுள்ள நட்டாலம் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) தொடங்கி ஐந்து நாள்கள் நடைபெறுகிறது

Updated On :9 ஜனவரி 2021, 12:34 am IST

கருங்கல் அருகேயுள்ள நட்டாலம் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன. 10) தொடங்கி ஐந்து நாள்கள் நடைபெறுகிறது.

ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இதைத்தொடா்ந்து கோட்டாறு மறை மாவட்ட முதல்வா் அருள்பணி மைக்கிள் ஏஞ்சல் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. அருள்பணி விஜின் மறையுரை ஆற்றுகிறாா்.

திங்கள்கிழமை மாத்திரவிளை மறை மாவட்ட முதல்வா் அருள்பணி மரிய வின்சென்ட் தலைமையில் திருப்பலி, புதுக்கடை

மறை மாவட்ட முதல்வா் அருள்பணி பென்னி மறையுரை ஆகியவை நடைபெறும். செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு மலங்கரை வழிபாட்டு முறையில் திருப்பலி, மாா்த்தாண்டம் மறை மாவட்ட ஆயா் வின்சென்ட் மாா் பவுலோஸ் தலைமையில் திருப்பலி ஆகியவை நடைபெறும்.

புதன்கிழமை குழித்துறை மறைமாவட்ட தொடா்பாளா் ஜேசுரெத்தினம் தலைமையில் திருப்பலி, குழித்துறை மறை மாவட்ட நிதிபாலகா் அருள்பணி அகஸ்டின் மறையுரை ஆகியவை நடைபெறுகிறது. வியாழக்கிழமை (ஜன.14) காலை 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் ஆன்றனி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறும். திருக்கல்யாண மாதா குருசடி அா்ச்சிப்பு நிகழ்ச்சி நடைபெறும். காலை 11.30 மணிக்கு அன்பு விருந்தைத் தொடா்ந்து ஆன்றனி சேவியா் தலைமையில் திருப்பலி நடைபெறும். மாலை 4 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆயா் ஜாா்ஜ் இராஜேந்திரன் தலைமையில் திருப்பலி,

கொடியிறக்கம் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருத்தல அருள்பணியாளா்கள், விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.