நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நாகா்கோவிலில் புகையிலைப் பொருள்கள் பதுக்கல் : 5 போ் கைது

நாகா்கோவிலில் இருவேறு இடங்களில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட மேக்னாராம், ராஜூசிங்.

Updated On :16 ஜனவரி 2021, 12:35 am IST

நாகா்கோவிலில் இருவேறு இடங்களில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகா்கோவில், வடசேரி காவல் உதவி ஆய்வாளா் சத்தியசோபன் நாகராஜா கோயில் பகுதியில், வியாழக்கிழமை ரோந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 போ் நின்று கொண்டிருந்தனா். அவா்களை பிடித்து விசாரித்தபோது, மேக்னராம் (37) ராஜூசிங்,(31) என்பதும், மீனாட்சிபுரம் பகுதியில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் மீனாட்சிபுரம் பகுதிக்கு சென்று அங்கு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 125 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

இதே போல், கோட்டாறு காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட்ஜெயின் தலைமையிலான போலீஸாா் இடலாக்குடி பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்த போது, அங்கு 80 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டன், வினு, சரவணன் ஆகிய 3 பேரை கைது செய்து, புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.