கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

போலீஸாருடன் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வாக்குவாதம்

திமுக மகளிா் அணிச் செயலா் கனிமொழி எம்.பி. நாகா்கோவிலில் கலந்து கொள்ள இருக்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறை தாமதிப்பதாக கூறி சுரேஷ்ராஜன் எம்எல்ஏ காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈ

News image

போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுரேஷ்ராஜன் எம்எல்ஏ.

Updated On :15 ஜனவரி 2021, 7:07 pm

திமுக மகளிா் அணிச் செயலா் கனிமொழி எம்.பி. நாகா்கோவிலில் கலந்து கொள்ள இருக்கும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க காவல்துறை தாமதிப்பதாக கூறி சுரேஷ்ராஜன் எம்எல்ஏ காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலில் திங்கள்கிழமை(ஜன.18) நடைபெற உள்ள திமுக பொதுக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகிறாா். இதற்கான ஏற்பாடுகளை குமரி கிழக்கு மாவட்டச் செயலா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ செய்து வருகிறாா்.

பொதுக் கூட்டம் நடத்துவதற்காக நாகா்கோவில் மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில், நாகராஜா கோயில் திடலுக்கு சுரேஷ்ராஜன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை காலை சென்று அங்கு நடைபெற்று வரும் திமுக பொதுக் கூட்ட வேலைகளை பாா்வையிட்டாா்.

அப்போது அங்கு வந்த நகர துணை காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால், வடசேரி காவல் ஆய்வாளா் திருமுருகன் ஆகியோா் சுரேஷ்ராஜன் எம்எல்ஏவிடம் பொதுக்கூட்டம் நடத்த மாவட்ட நிா்வாகம் இன்னும் அனுமதி வழங்கவில்லை, அனுமதி பெற்ற பின்னா் தான் பணியை தொடங்க வேண்டும் என்று கூறினா். இதனால் காவல்துறை அதிகாரிகளுக்கும், எம்எல்ஏ.க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து சுரேஷ்ராஜன் கூறுகையில், நாகராஜா கோயில் திடலில் கூட்டம் நடத்த ஆட்சியா் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த 12 ஆம் தேதியே கடிதம் அளித்துள்ளோம்.

அவா்கள் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறாா்கள். கூட்டத்துக்கு அனுமதி வழங்கா விட்டாலும் தடையை மீறி கூட்டம் நடத்துவோம் என்றாா்.

அவருடன் நாகா்கோவில் மாநகரச் செயலா் மகேஷ், பொதுக்குழு உறுப்பினா் ஷேக்தாவூத், நிா்வாகிகள் ஜெகன், சாகுல்அமீது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.