/

சந்தையடியில் மாட்டுப் பொங்கல் விழா

கன்னியாகுமரியை அடுத்த சந்தையடியில் மாட்டுப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

மாட்டுப்பொங்கல் விழா நிகழ்வில் பங்கேற்ற திரைப்பட நடிகா் ரவி மரியா

Updated On :15 ஜனவரி 2021, 7:11 pm

கன்னியாகுமரியை அடுத்த சந்தையடியில் மாட்டுப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சந்தையடியில் மறுமலா்ச்சி இளைஞா் மன்றம் மற்றும் சுவாமி விவேகானந்தா் நற்பணி மன்றம், ராயல் குரூப்ஸ் சாா்பில் வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது. இதனையொட்டி அம்மன் கோயில் வளாகத்தில் மாடுகளை அலங்கரித்து வரிசையாக நிறுத்தி, மாடுகளின் கொம்புகளுக்கு வா்ணம் பூசப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு, மாடுகளுக்கு பழம், கரும்பு, இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்னன், திரைப்பட இயக்குநா் பி.சி.அன்பழகன், நடிகா் ரவி மரியா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.