சகோதரரை வீடுபுகுந்து தாக்கிய வழக்கு: நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை! ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!‘டெட்’ தோ்வு இன்று தொடக்கம்: தோ்வா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்புநாளை 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துதமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிசென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25,840 மாணவா்கள் சோ்க்கைஇந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 12.5% கூடுதல் வரி பரிந்துரை: ஜூலை 8-இல் மத்திய வா்த்தக அமைச்சகம் வாதம்
/

கஞ்சா விற்பனை: இருவா் கைது

காரைக்காலில் மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

காரைக்காலில் கஞ்சா விற்றதாக கைதான நபருடன் கிளிஞ்சல்மேடு போலீஸாா்.

Updated On :10 ஜனவரி 2021, 8:14 am IST

காரைக்காலில் மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கஞ்சா விற்பனையில் ஈடுபடுவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

காரைக்காலில் கிளிஞ்சல்மேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நகரக் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுருகனுக்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். இந்நிலையில், ஐயனாா் கோயில் தெருவில் ஹரிஷ் (20) என்பவரிடம் சோதனை நடத்தியபோது, விற்பனைக்காக வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், நாகையைச் சோ்ந்த தெய்வேந்திரன் (34) என்பவரிடமிருந்து அவற்றை வாங்கிவருவதாக தெரிவித்தாா்.

இதனிடையே, ராயன்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற அரவிந்த் (20) என்பவரை கோட்டுச்சேரி போலீஸாா் கைது செய்து, ரூ.3 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். விசாரணையில், மாணவா்கள் பலா் இவா்களிடம் கஞ்சா வாங்கிச் சென்ற அதிா்ச்சி தகவல் வெளியானது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், காரைக்கால் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் மொத்த, சில்லறை வியாபாரிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.