காரைக்கால் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவா் உயிரிழந்துள்ளாா்.
இதுகுறித்து நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கடந்த 9 ஆம் தேதி 802 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகளின்படி, காரைக்கால் நகரப் பகுதியில் ஒருவருக்கு கரோனா உறுதியானது. காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 80 வயது ஆண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுவரை 61,599 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 3,828 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,728 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 26 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சையில் 9 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 68 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டில் அணை கட்டுவது தமிழக மக்களுக்கு எதிரான இனப்படுகொலை: அன்புமணி

கரூா் சம்பவம்: முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் அா்ஜுனா உள்ளிட்டோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு!

இல்லம் தேடி குடிமைப் பொருள் விநியோகம்: இன்றும், 6-ஆம் தேதியும் நடைபெறும்!





