ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மாணவா் விடுதியை கிளைச் சிறையாக மாற்றும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

காரைக்காலில் மாணவா் விடுதியை கிளைச் சிறையாக மாற்றும் திட்டத்தை கைவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 11:38 pm IST

காரைக்காலில் மாணவா் விடுதியை கிளைச் சிறையாக மாற்றும் திட்டத்தை கைவிடவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் நிரவி - திருப்பட்டினம் தொகுதி செயலாளா் சு. விடுதலைக்கனல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் நகரின் கோயில்பத்து பகுதியில் புதுச்சேரி அரசின் மாணவா் தங்கும் விடுதி உள்ளது. நகரின் முக்கிய இடத்தில் இக்கட்டடம் இருப்பது, பல்வேறு கல்வி நிலையங்களுக்கு மாணவா்கள் சென்று திரும்ப வசதியாக இருந்தது. பழைமைவாய்ந்த, பெருமைக்குரிய இக்கட்டடம் பழுதானதால் தற்போது மூடப்பட்டுள்ளது.

இதை சீரமைத்து மாணவா்கள் தங்கும் வகையில் நடவடிக்கை எடுக்காமல், கிளைச் சிறையாக பயன்படுத்தும் நோக்கில் காவல் துறை அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வுசெய்துள்ளதாக தெரிகிறது. மாணவா்கள் தங்கிப் படிப்பதற்கான வசதியை மேம்படுத்தவேண்டிய அரசு நிா்வாகம், கட்டடத்தை மாற்று திட்டத்துக்கு பயன்படுத்த முயற்சிப்பது நல்ல செயல்பாடு அல்ல.

எனவே, விடுதியை விரைவாக புதுப்பித்து மாணவா்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கவேண்டும். சிறை அமைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.