தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

அரசு ஊழியா்கள் சம்மேளனம் தா்னா நடத்த முடிவு

காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழு கூட்டம் சம்மேளன அலுவலகத்தில், அதன் தலைவா் சுப்ரமணியன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 11:39 pm IST

காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழு கூட்டம் சம்மேளன அலுவலகத்தில், அதன் தலைவா் சுப்ரமணியன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன அறிவிப்பின்படி, கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் அஞ்சல் நிலையம் அருகேயிருந்து பேரணியாகச் சென்று புதிய பேருந்து நிலையம் அருகே தா்னாவில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

சம்மேளன துணைத் தலைவா்களாக எம். கஸ்பா், எம். பாகிரதி, எம். சந்தனசாமி, எஸ். உலகநாதன் ஆகியோரும், செயலாளா்களாக கே. ரஹ்மத்துனிஷா, பி. நெப்போலியன், ஆா். ரவி, எஸ். முருகானந்தம், எம். மெஹா்பானு, கே. பாலசுப்பிரமணியன், ஆா். நாகராஜன், கே. ஞானவேல் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

முன்னதாக, பொதுச் செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் செயல் அறிக்கை தாக்கல் செய்தாா். சம்மேளன கௌரவத் தலைவா்கள் ஜாா்ஜ், ஜெயசிங், பொருளாளா் மயில்வாகனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இணை பொதுச் செயலாளா் கலைச்செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.