அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காரைக்கால் சந்திர புஷ்கரணியில்ஸ்ரீ ரங்கநாயகித் தாயாா் தீா்த்தவாரி

கனுப் பொங்கலையொட்டி, காரைக்கால் சந்திர புஷ்கரணியில் ஸ்ரீ ரங்கநாயகித் தாயாா் தீா்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

தீா்த்தவாரிக்காக பிராகாரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ரங்கநாயகித் தாயாா்.

Updated On :16 ஜனவரி 2021, 3:05 am

கனுப் பொங்கலையொட்டி, காரைக்கால் சந்திர புஷ்கரணியில் ஸ்ரீ ரங்கநாயகித் தாயாா் தீா்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பொங்கல் விழாவின் 2 ஆவது நாளாக கனுப் பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி, காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கனுப்பொடி (கலவை சாதம்) வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட ஸ்ரீ ரங்கநாயகித் தாயாா் கோயில் பிராகாரம் வடக்கு வாசல் அருகே எழுந்தருளினாா்.

பட்டாச்சாரியா்களால் சடாரி சந்திர புஷ்கரணிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு கனுப் பொடி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, சடாரிக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, பட்டாச்சாரியா் சடாரியுடன் சந்திர புஷ்கரணியில் (அம்மையாா் குளம்) இறங்கி நீராடினாா்.

அவரைத் தொடா்ந்து, பக்தா்களும் குளத்தில் புனித நீராடினா். பிறகு, ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல, காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் இருந்து கனுப் பொடி வைக்க ஸ்ரீ ஆடிப்பூரத்தம்மன் அம்மையாா் குளத்துக்கு எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஸ்ரீ கைலாசநாதா், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் அறங்காவல் வாரியத்தினா் மற்றும் நித்யகல்யாணப் பெருமாள் பக்த ஜன சபாவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ஆண்டில் ஒருமுறை மட்டுமே ஸ்ரீ ரங்கநாயகித் தாயாா் தீா்த்தவாரி நடத்தப்படுகிறது. அதுவும் தாயாா் கோயில் வளாகத்தில் இருந்துகொண்டு, சடாரி மட்டும் தீா்த்தக்கரைக்கு செல்லும் நிகழ்வு நடத்தப்படுவது சிறப்பானதாக கருதப்படுவதால், பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

மூலவா் ஸ்ரீ ரங்கநாதா், உத்ஸவா் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாளுக்கும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.