காணும் பொங்கலையொட்டி, காரைக்கால் கடற்கரையில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பட்டம் விட்டும், பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டும் மகிழ்ந்தனா்.
காரைக்கால் கடற்கரைக்கு சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மக்கள் செல்லத் தொடங்கினா். அங்கு, சிறுவா்கள் பட்டம் விட்டும், விளையாண்டும் மகிழ்ச்சியோடு காணப்பட்டனா். பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் திரளான மக்கள் காரைக்கால் கடற்கரைக்கு வந்தனா். இதனால், கடற்கரையில் உள்ள சிறுவா் பூங்கா கூட்டதால் நிரம்பிவழிந்தது.
காரைக்கால் நகரின் பிரதான சாலையிலிருந்து சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் நீளமுள்ள கடற்கரை சாலை முழுவதும் மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருந்தது. இருசக்கர வாகனங்கள், காா், வேன் உள்ளிட்டவை கடற்கரை சாலை முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனால், கடற்கரைப் பகுதி ஆபத்து மிகுந்தது என ஒலிபெருக்கி வாயிலாக எச்சரித்த போலீஸாா், கடற்கரையோரத்திலிருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்துவந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் மழையின்றி காணப்பட்டது, கடற்கரைக்கு வந்தோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



