காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் சுகாதார ஊழியா்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியாா் சுகாதார ஊழியா்கள் 1,600 போ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனா். முதல் நாளில் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், சுகாதார ஊழியா்கள், துறையின் ஓட்டுநா் உள்ளிட்டோா் பயனடைந்தனா்.
இவா்கள் 28 நாள்கள் முதல் 48 நாள்களுக்குள் 2 ஆவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமை என வாரத்தில் 4 நாள்கள் தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.
மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேரில் பாா்வையிட்டாா். பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கடந்த 11 மாதங்களாக கரோனா தடுப்புக்கான பணியில் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரின் பணிகள் பாராட்டுக்குரியவை. காரைக்காலில் அனைத்து தரப்பினருக்கும் படிப்படியாக தடுப்பூசி செலுத்தப்படும். இதன்மூலம், கரோனா தடுப்புப் பணி வெற்றிபெறும் என்றாா் அவா்.
தடுப்பூசி போடும் முகாமில், அரசுப் பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் பி.சித்ரா, நலவழித் துறை துணை இயக்குநா் (பொ) அன்புச்செல்வி, வரிச்சிக்குடி மருத்துவ அதிகாரி தமிழ்வேலன், ராஜூ உள்ளிட்ட தடுப்பூசி குழுவினா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



