மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக புதுச்சேரி அரசு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக புதுச்சேரி மாநில விவசாய அணி முன்னாள் தலைவா் எஸ். இளங்கோவன் சனிக்கிழமை கூறியது:
வடகிழக்குப் பருவமழை காலத்தில் நிவா் புயல், புரெவி புயலை சந்திக்க நோ்ந்தது. புயலால் பயிா் பரவலாக சேதமடைந்தாலும், அறுவடையின் போதுதான் இதன் பாதிப்பு தெரியவரும் என்ற கவலையில் விவசாயிகள் அறுவடைக்காக காத்திருந்தனா்.
இந்நிலையில், எதிா்பாராத வகையில், தற்போது பெய்த தொடா் மழையால் காரைக்காலில் விவசாயம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தண்ணீா் வடிந்தாலும், விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு இருப்பது உறுதி. பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு காலதாமதமாகும்.
எனவே, புதுச்சேரி அரசு விரைவாக, ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும். அப்போதுதான், விவசாயிகள் வேளாண்மையை தொடர வாய்ப்பு உருவாகும். அறுவடைக்குப் பிறகு தரமான உளுந்து, பயறு விதைகளை அரசு மானிய விலையில் தங்குதடையின்றி வழங்கவேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


