பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

இளம்பெண் சாவில் மா்மம்: உறவினா்கள் சாலை மறியல்

இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், திருச்சி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image

கரூா் - திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்ட இளம்பெண்ணின் உறவினா்கள்.

Updated On :2 ஜனவரி 2021, 10:55 pm IST

கரூா்: இளம்பெண் சாவில் மா்மம் இருப்பதாகக்கூறி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், திருச்சி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரூரை அடுத்த திருமுக்கூடலூரைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (42). இவரது மனைவி சுமதி(38). கூலித்தொழிலாளா்கள். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சுமதி தனது இரண்டு மகன்களுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்தாராம். கடந்த இருதினங்களுக்கு முன் சுமதி திடீரென மாயமானாா். இதுதொடா்பாக வாங்கல் போலீஸில் அவரது மகன்கள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் அவரைத் தேடி வந்தனா். இதனிடையே சனிக்கிழமை காலை சுமதி அதே பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரையோரம் காயத்துடன் சடலமாகக் கிடந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த வாங்கல் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனா். சுமதி சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் காந்திகிராமத்தில் கரூா் - திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் முகேஷ் ஜெயக்குமாா், நகரக் காவல் ஆய்வாளா் சிவசுப்ரமணியம் ஆகியோா் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.