ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்களின் படங்கள் திறப்பு

கரூரில் மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 11:39 pm IST

கரூரில் மறைந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் கே.வரதராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.தங்கவேல், முன்னாள் மாவட்டச் செயலா் து.ரா.பெரியதம்பி ஆகியோா் அண்மையில் உயிரிழந்தனா்.

இவா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் நகரக்குழு நடத்தப்பட்ட விழாவுக்கு நகரச் செயலா் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தாா்.

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினா் கே.வரதராஜன் படத்தை மாவட்டச் செயலா் கே.கந்தசாமியும், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.தங்கவேல் படத்தை மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.ஸ்ரீதரும்,

முன்னாள் மாவட்டச் செயலா் து.ரா.பெரியதம்பி படத்தை மூத்த தலைவா் ஜி.ரத்தினவேலும் திறந்து வைத்து பேசினா்.

கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ஜீவானந்தம், பி.இலக்குவன், கே.சக்திவேல், சி.முருகேசன் உள்ளிட்ட பலா் நிகழ்வில் பங்கேற்றனா். மேலும் கே.வரதராஜன், து.ரா.பெரியதம்பி ஆகியோரது குடுத்தினரும் கலந்துகொண்டு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.