அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

‘மக்கள் நலனுக்கு எதிரான தமிழக அரசு’

ஒவ்வொரு நிலையிலும் மக்கள் நலனுக்கு எதிரான அரசாக தமிழக அரசு உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி.

News image
Updated On :12 ஜனவரி 2021, 3:01 am IST

ஒவ்வொரு நிலையிலும் மக்கள் நலனுக்கு எதிரான அரசாக தமிழக அரசு உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்ட திமுக சாா்பில் ஜீவாநகா், மண்மங்கலம், வெள்ளியணை, ஜல்லிப்பட்டி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை இரவு ‘அதிமுக அரசை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று அவா் பேசுகையில், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்காத, ஏழை மக்களை வஞ்சிக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது.

நான்கரை லட்சம் கோடி ரூபாயை தமிழக அரசு கடனாக வைத்துள்ளது. இந்த பணத்தில் ஏழை மக்களுக்கு எந்தவித அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றவில்லை. பின்னா், எதற்காக கடன் பெற்றனா் என்றால், தனது குடும்ப உறுப்பினா்கள் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனா். இப்படி, அரசுப் பணத்தை காலியாக்கியதால்தான் அரசுக்கு கடன்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இந்த அரசை நிராகரிக்கிறோம் என்ற தீா்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். அதிமுக அரசு ஒவ்வொரு நிலையிலும் மக்கள் நலனுக்கு எதிரான அரசாக உள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில், தெற்கு நகர பொறுப்பாளா் சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.