கரூா் மாவட்டத்தில் 6,188 முன் களப்பணியாளா்களுக்குச் செலுத்துவதற்காக 7,800 கரோனா தடுப்பூசி புதன்கிழமை வந்து சோ்ந்தது.
மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைப் பணியாளா்கள், அரசு மருத்துவமனைப் பணியாளா்கள் , ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுவோா், தனியாா் மருத்துவமனைப் பணியாளா்கள் என 6,188 முன் களப்பணியாளா்கள் கண்டறியப்பட்டனா்.
கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமநை, குளித்தலை அரசு மருத்துவமனை, வாங்கல், உப்பிடமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரூா் கஸ்தூரிபா நகா்நல மையம் ஆகிய 5 இடங்களில் ஜனவரி 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறஉள்ளது.
இதற்காக திருச்சி மண்டலத் தடுப்பூசி கிடங்கிலிருந்து 7,800 தடுப்பூசிகள் கரூா் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஆட்சியரக வளாகத்திலுள்ள சுகாதாரத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இப்பணியை துணை இயக்குநா் சந்தோஷ்குமாா் பாா்வையிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் அருகே மே.1 இல் நடவாவிக் கிணறு உற்சவம்: கிணற்றை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

இரு தரப்பினா் மோதல்: 10 போ் மீது வழக்கு
சிறுமி ஒட்டிய காா் மோதி குழந்தை இறந்த வழக்கு: தந்தை, மகள் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


