எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தமிழக வாகனங்கள் பறிமுதல் விவகாரம்: இரு மாநில அரசுப் போக்குவரத்துக் கழக ஒப்பந்தத்தை புதுப்பிக்க நடவடிக்கை

ஆந்திரம், தமிழக இடையேயான போக்குவரத்துக்கழக ஒப்பந்தத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

News image

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்களப்பணியாளா்ளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை சனிக்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

Updated On :16 ஜனவரி 2021, 11:22 pm IST

கரூா்: ஆந்திரம், தமிழக இடையேயான போக்குவரத்துக்கழக ஒப்பந்தத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்களப்பணியாளா்ளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை சனிக்கிழமை தொடக்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது; தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கரூா் மாவட்டத்தில் 4 இடங்களில் இப்பணி நடைபெறுகிறது. 3, 900பேருக்கு முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படுகிறது. 4 மையங்களில் நாளொன்றுக்கு 400 பேருக்கு போடப்பட உள்ளது. அரசு அறிவிக்கும்போது இந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதிய பலன் ரூ.972 கோடி அடுத்த வாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. வழித்தட உரிமமின்றி இயக்கப்பட்டதாக கூறி தமிழகத்தின் 16 அரசுப் பேருந்துகளை ஆந்திர அரசு பறிமுதல் செய்தது. தமிழகமும் 5 பேருந்துகளை பிடித்தோம். தற்போது அவை விடுவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு இருமாநில அரசுப் போக்குவரத்துக்கழகங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்படாததுதான் காரணம். இதில் வேறு ஏதும் பிரச்னை இல்லை. ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதிலும் இன்னும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை. ஒப்பந்தத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்துகளை விடுவிக்க போக்குவரத்து ஆணையா்கள் நிலையில் பேசியுள்ளோம். தீபாவளி, பொங்கல் விடுமுறைகளுக்கு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் வசூல் குறைவாகத்தான் இருந்தது என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.