கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்த நாள் விழாவுக்கு மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன் தலைமை வகித்தாா். முன்னாள் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா முன்னிலையில் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காந்தி கிராமத்திலுள்ள சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகம் முன்பு, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதா மணிவண்ணன் தலைமை வகித்து, எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். மணிவண்ணன் முன்னிலை வகித்தாா்.
கோவைச்சாலையில் மாவட்டமாணவரணி, திண்ணப்பா திரையரங்கம் அருகே பேரவை, மீனவரணி உள்ளிட்டஅணிகள் சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டதையடுத்து, வெங்கமேட்டில் எம்ஜிஆா், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் மாவட்டப் பேரவைச் செயலா் காமராஜ், பாசறைச் செயலா் கமலக்கண்ணன், இளைஞரணிச் செயலா் தானேஷ், இலக்கிய அணிச் செயலா் என்.எஸ். கிருஷ்ணன், மீனவரணிச் செயலா் சுதாகா், மாணவரணிச் செயலா் சரவணன், இணைச் செயலா் விசாகன், நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், எம்.பாண்டியன், நகரப்பேரவைச் செயலா் சேரன் பழனிசாமி, கரூா் வட்டக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் என்.பழனிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



