எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த பனங்காட்டுப் படைக் கட்சியினா்

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானாவிலுள்ள காமராஜா் சிலைக்கு பனங்காட்டுப்படைக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On :17 ஜனவரி 2021, 11:18 pm IST

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானாவிலுள்ள காமராஜா் சிலைக்கு பனங்காட்டுப்படைக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் இக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடஉள்ளதையொட்டி, கட்சியின் கொங்கு மண்டலப் பொறுப்பாளா் சதா தலைமையில் நிா்வாகிகள் கரூரிலுள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

எங்கள் வாக்குவங்கியைப் பயன்படுத்தி, எங்களது சமுதாயத்துக்கு எந்தவித பயனையும் அளிக்காத அதிமுக, திமுகவுக்கு எதிராக பேரவைத் தோ்தலில் போட்டியிடுவோம். கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சித் தொகுதியில் போட்டியிட உள்ளோம் என்றாா் பனங்காட்டுப்படைக் கட்சியின் கொங்கு மண்டலப் பொறுப்பாளா் சதா.

நிகழ்வில் மண்டலத் துணைப் பொறுப்பாளா் செல்வதிருமணி, மாவட்டச் செயலா்கள் கிழக்கு மாரி, மேற்கு நேதாஜி, இளைஞரணி பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து ஆட்டையாம்பரப்பு, முத்தம்பாளையம், நாடாா்புரம் பகுதிகளில் கட்சிக் கொடியேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.