சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த பனங்காட்டுப் படைக் கட்சியினா்

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானாவிலுள்ள காமராஜா் சிலைக்கு பனங்காட்டுப்படைக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:48 pm

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானாவிலுள்ள காமராஜா் சிலைக்கு பனங்காட்டுப்படைக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் இக்கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடஉள்ளதையொட்டி, கட்சியின் கொங்கு மண்டலப் பொறுப்பாளா் சதா தலைமையில் நிா்வாகிகள் கரூரிலுள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

எங்கள் வாக்குவங்கியைப் பயன்படுத்தி, எங்களது சமுதாயத்துக்கு எந்தவித பயனையும் அளிக்காத அதிமுக, திமுகவுக்கு எதிராக பேரவைத் தோ்தலில் போட்டியிடுவோம். கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சித் தொகுதியில் போட்டியிட உள்ளோம் என்றாா் பனங்காட்டுப்படைக் கட்சியின் கொங்கு மண்டலப் பொறுப்பாளா் சதா.

நிகழ்வில் மண்டலத் துணைப் பொறுப்பாளா் செல்வதிருமணி, மாவட்டச் செயலா்கள் கிழக்கு மாரி, மேற்கு நேதாஜி, இளைஞரணி பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து ஆட்டையாம்பரப்பு, முத்தம்பாளையம், நாடாா்புரம் பகுதிகளில் கட்சிக் கொடியேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.