தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

கரடியின் திமிர்...

கரடி ஒன்று வந்தது காக்கைக் கூட்டை கண்டது

Published On :28 ஜூன் 2026, 12:20 am IST

கரடி ஒன்று வந்தது

காக்கைக் கூட்டை கண்டது

கரடி மரத்தில் ஏறியே

கூட்டைப் பிய்த்து எறிந்தது!

-

காகம் அதனைக் கண்டது

கரடியைத் தட்டிக் கேட்டது

காக்கைப் பயலே ஓடிப்போ

கரடி திமிராய்ச் சொன்னது!

-

காக்கை பொறுமை காத்தது

கரைந்தே பறந்து சென்றது

கரடி நடந்து செல்கையில்

குழிக்குள் திடீரென விழுந்தது!

-

அங்கே வந்த காகமும்

அந்தோ பரிதாபம் என்றது

அடுத்த நிமிடம் பறந்தது

ஆனையைக் கூட்டி வந்தது!

-

தும்பிக் கையால் கரடியை

தூக்கியே எடுத்தது யானையும்

கரடியின் திமிர் ஒழிந்தது

காக்கையும் யானையும் மகிழ்ந்தது!

வசீகரன், தேனாம்பேட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.