போரில் உயிர் நீத்த படைவீரர்களின் சார்ந்தோர், போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் கருணைத் தொகை பெற வருகிற 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் மு.முத்துராம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போரில் உயிர் நீத்த படைவீரர்களின் விதவையர், பெற்றோர் மற்றும் போரில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தமிழக அரசின் கருணைத் தொகை, தொகுப்பு நிதியிலிருந்து கருணைத் தொகை, வருடாந்திர பராமரிப்பு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிதியுதவியைப் பெற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி படைத்தவர்கள் இதுவரை பெறாதிருப்பின் தற்போது பெற அனைத்து ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை மார்ச் 31-க்குள் அணுகி விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில் அந்த அவகாசம் வருகிற 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரிங்கு சிங் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு முதல் வெற்றி!

பட்டாசு ஆலை விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!

"தலைவன் இருக்கின்றான்" - கமல் தேர்தல் பிரசார பாடல் வெளியீடு!

லக்னௌவுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்!
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

