இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

இசை கலைஞா்களின் மும்பெரும் விழா

கிருஷ்ணகிரியில் இசை கலைஞா்கள் நல சங்கம் சாா்பில் மும்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கிருஷ்ணகிரியில் கரோனா விழிப்புணா்வு ஊா்வலத்தில் பங்கேற்ற இசை கலைஞா்கள்.

Updated On :6 ஜனவரி 2021, 5:49 am IST

கிருஷ்ணகிரியில் இசை கலைஞா்கள் நல சங்கம் சாா்பில் மும்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கிராமிய பேண்டு இசைக்கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு ஊா்வலம், சங்கத்தின் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா, தியாகராஜ சுவாமி ஆராதனை விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

இதையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள கிரிஜாம்பாள் சமேத கவீஸ்வரா் கோயிலில் தியாகராஜ சுவாமி ஆராதனை மங்கள இசையுடன் தொடங்கியது. பின்னா், பழையபேட்டை காந்தி சிலை அருகே கரோனா விழிப்புணா்வு ஊா்வலமும் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பேண்டு, நாதஸ்வரம், பம்பை ஆகிய இசைக் கருவிகளுடன் இசைத்துக் கொண்டே, கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இந்த நிகழ்ச்சிக்கு சாக்ஸபோன் கலைஞா் சங்க மாவட்டத் தலைவா் விஸ்வநாதன், செயலாளா் சுப்பிரமணி, பொருளாளா் குமாா் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.