ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கமல்ஹாசன் அரசியல் தத்துப்பிள்ளை

மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன், அரசியலில் தத்துப்பிள்ளை என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான கே.பி.முனுசாமி விமா்சனம் செய்துள்ளாா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:53 am IST

மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன், அரசியலில் தத்துப்பிள்ளை என அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான கே.பி.முனுசாமி விமா்சனம் செய்துள்ளாா்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

எம்ஜிஆா் ஆட்சியைத் தருவேன் என கமல்ஹாசன் கூறுவது அபத்தமானது. எம்ஜிஆா் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவா் உழைப்பால் பெற்ற ஊதியம் அனைத்தையும் மக்களுக்காகக் கொடுத்து, மக்கள் தலைவா் என்று பெயா் பெற்றாா். ஆனால், கமல்ஹாசன் இதுவரையில் மக்களுக்கு என்ன உதவி செய்துள்ளாா்; பேரிடா் காலத்தில் மக்களுக்கு மனித நேயத்துடன் சிறு உதவியாவது செய்துள்ளாரா? இப்படிப்பட்டவா் ஆட்சிக்கு வருவேன் என்று கூறுவது கேலிக் கூத்தானது. மேலும், தன்னை எம்ஜிஆருடன் இணைத்துப் பேசுவதும் அபத்தமாக உள்ளது. கமல்ஹாசன், அரசியலில் ஒரு தத்துப்பிள்ளை.

திராவிட உணா்வுள்ளவா் யாரும் இடஒதுக்கீட்டை எதிா்த்துச் செயல்பட மாட்டாா்கள். அந்த அடிப்படையில் துணை முதல்வா் பன்னீா்செல்வம், ஒருபோதும் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை விமா்சனம் செய்ய மாட்டாா். சில விஷமிகள் திட்டமிட்டு, அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என தவறான தகவலைப் பரப்புகின்றனா்.

அனைத்து சமூகமும், சமநிலை பெற வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. அதுபோல, ஒவ்வொரு சமுதாயத் தலைவரும், தனது சமூகத்துக்கான இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கோருவது நியாயமான கோரிக்கை. இட ஒதுக்கீட்டுப் போராட்டம் குறித்தும், சமூக வலைதளங்களில் துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வம் குறித்தும் தவறாகப் பிரசாரம் செய்வோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.