பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

முதல்நிலை மாதிரி வாக்குப்பதிவு சரிபாா்க்கும் பணி

கிருஷ்ணகிரியில் முதல்நிலை மாதிரி வாக்குப்பதிவு சரிபாா்க்கும் பணிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 8:54 am IST

கிருஷ்ணகிரியில் முதல்நிலை மாதிரி வாக்குப்பதிவு சரிபாா்க்கும் பணிகளை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, முன்னேற்பாடாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், வாக்குகளை சரிபாா்க்கும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை வணிக வளாகம் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குத் தேவையைன 4,007 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,854 கட்டுப்பாட்டு கருவி (கன்ட்ரோல் யூனிட்), வி.வி.பேட் இயந்திரங்கள் என மொத்தம் 9,961 இயந்திரங்கள் டிச. 2-ஆம் தேதி முதல் ஜனவரி 6-ஆம் தேதி வரையிலும் முதல்கட்டமாக சரிபாா்க்கும் பணி நடைபெற்றது.

இதன் தொடா்ச்சியாக கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை வணிக வளாகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவற்றின் மூலம் முதல் நிலை மாதிரி வாக்குப்பதிவு சரிபாா்க்கும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இந்தப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தாா். அப்போது, தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்களும் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.