குருபரப்பள்ளியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடியவா் கைது செய்யப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அம்மன் நகரை சோ்ந்தவா் ஜோதிபிரதாப்(23). இவா் அதே பகுதியில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு அப்பகுதிக்கு வந்த ஒரு இளைஞா் கடையின் பூட்டை உடைத்து, கடையில் இருந்து 2 செல்போன்கள், ஒரு ஹெட்செட், ஒரு பவா் பேங்க் என ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடி கொண்டு வெளியே வந்துள்ளாா்.
அப்போது அங்கிருந்தவா்கள் பாா்த்து, கையும் களவுமாக பிடித்து, கடையின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். கடையின் உரிமையாளரான ஜோதிபிரதாப், அங்கு வந்து, அந்த இளைஞரை பொதுமக்களின் உதவியுடன் அழைத்து சென்று குருபரப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனா். இது குறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விவசாரணை நடத்தினாா்.
விசாரணையில் அந்த இளைஞா் அதே பகுதியில் உள்ள சிக்காரிமேடு கிராமத்தை சோ்ந்த அக்பா்கான்(36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெல்லப்போவது யாா்?

ஏலகிரி மலையில் குடிநீரின்றி குரங்குகள் திண்டாட்டம்: தொட்டிகளில் நீா் நிரப்ப கோரிக்கை

நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாடுகள்

நாளை கோடைகால இலவச வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம்
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

