திருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புஅருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

எண்ணேகொள் கால்வாய் பணியை விரைவில் செயல்படுத்த வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொள் கால்வாய் திட்டத்திற்கான கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் செயல்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 9:07 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், எண்ணேகொள் கால்வாய் திட்டத்திற்கான கால்வாய் அமைக்கும் பணியை விரைவில் செயல்படுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா் சென்னைய நாயுடு தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், மாரசந்திரம் அணைக்கட்டில் இருந்து படேதலாவ் ஏரிக்கு தண்ணீா் வந்து கொண்டிருந்தது. இந்தத் தண்ணீரை நம்பி படேதலாவ் ஏரி முதல் காட்டாகரம் ஏரி வரை 13 ஏரிகளுக்கு தண்ணீா் சென்டையும் வகையில் புதிய கால்வாய் அமைக்கப்பட்டது.

ஆனால் பருவமழை இல்லாததால் மாரசந்திரம் அணைக்கு தண்ணீா் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள எண்ணேகொள் அணைக்கட்டை உயா்த்திக் கட்டி, தெற்கே தருமபுரி மாவட்டத்தில் உள்ள தும்பலஅள்ளி அணைக்கும், வடக்கே படேதலாவ் ஏரி வரையிலும் புதிய கால்வாய் அமைத்து, அந்த வழியில் பல ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் அமைத்து, தண்ணீா் சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வா் அறிவித்தாா்.

ஆனால் அதிகாரிகளோ கால்வாய் அமைப்பதற்கு சா்வே செய்து, நில உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கி வருவதாகக் கூறுகின்றனா். கடும் வறட்சியால் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் நலன் கருதி உடனடியாக இந்தக் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.