திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூரில் மனைவியைக் கொன்ற கணவன் கைது

சாத்தூர், ஆக.10: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமீர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவரது மனைவி கற்பகவல்லி (25). திருமணமான நாளில் இருந்தே இவர்களிருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

Updated On :26 செப்டம்பர் 2012, 5:43 am

சாத்தூர், ஆக.10: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமீர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவரது மனைவி கற்பகவல்லி (25). திருமணமான நாளில் இருந்தே இவர்களிருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி வாக்குவாதம் எழுவதுண்டாம். இந்நிலையில் இன்று காலை கருப்பசாமி வெளியே சென்று தண்ணீர் எடுத்துவந்துள்ளார். அப்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் பலத்த வாக்குவாதம் எழவே, கோபத்தில் கருப்பசாமி அரிவாளை எடுத்து கற்பகவல்லியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கற்பகவல்லி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதை அடுத்து சாத்தூர் தாலுகா போலீஸார் கருப்பசாமி மீது வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.