சென்னை, ஆக.12: சென்னையில் இன்று காலை ஹோட்டல் அரங்கு ஒன்றில் நடைபெற்ற டெசோ மாநாட்டு கருத்தரங்க நிகழ்ச்சிக்கு பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
திட்டமிட்டபடி டெசோ மாநாடு நடைபெறும் என்று அறிவித்தபடி, இன்று காலை சென்னையில் ஹோட்டல் ஒன்றில் டெசோ மாநாட்டின் முதல் நிகழ்ச்சியான கருத்தரங்கக் கூட்டம் நடந்தது. இது ஒரு சிறு கூட்டமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பத்திரிகையாளர்கள்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பிட்ட சிலர்தான் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்காத பட்சத்தில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.