தருமபுரியில் விஜயகாந்த் மீது வழக்கு: நேரில் ஆஜராக உத்தரவு
தருமபுரி நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் வரும் ஜன.22ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


தருமபுரி நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் வரும் ஜன.22ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி தருமபுரியில் தேமுதிக சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் முனுசாமி மற்றும் அரசு நிர்வாகத்தை தரக்குறைவாகவும் அவதூறாகவும் விஜயகாந்த் பேசியதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வணங்காமுடி, விஜயகாந்த் வரும் 2013ம் வருடம் ஜனவரி 22ம் தேதி தருமபுரி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...