கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தலித் மாணவர் கொலை வழக்கு: காதலித்த மாணவியின் பாட்டி கைது

சிதம்பரம் தலித் கல்லூரி மாணவர் கொலை வழக்கில், காதலித்த மாணவியின் பாட்டியை ஒரத்தூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :20 டிசம்பர் 2012, 1:54 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் தலித் கல்லூரி மாணவர் கொலை வழக்கில், காதலித்த மாணவியின் பாட்டியை ஒரத்தூர் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள சென்னிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமுஷ்ணம் தனியார் கல்லூரியில் பயிலும் தலித் மாணவர் கோபாலகிருஷ்ணன் (18). தலித் மாணவர் கோபாலகிருஷ்ணனும், பரதூர் சாவடியைச் சேர்ந்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி துர்காதேவியும் (19) காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர் கோபாலகிருஷ்ணன் டிச.12-ம் தேதி கல்லூரி சென்றவர் காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை மாயகிருஷ்ணன் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் மாணவரை காணவில்லை என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மாணவர் கோபாலகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டு சிதம்பரம் அருகே சாத்தமங்கலம் கன்னிவாய்க்காலில் கழுத்தறுபட்ட நிலையில் அவரது சடலம் டிச.18-ம் தேதி புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் மாணவர் காணவில்லை என்ற வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முக்கிய குற்றவாளியான பரதூர் சாவடியைச் சேர்ந்த மாணவி துர்காதேவியின் பாட்டி கனகவள்ளியை (வயது 70) போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து விருத்தாசலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இக்கொலை வழக்கில் 4 பேரை தேடி வருவதாக  டிஎஸ்பி ஆறுமுகசாமி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.