ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இறுதிச் சடங்குக்கு சென்று திரும்பும்போது விபத்து: லாரி கவிழ்ந்து 23 பேர் காயம்

பொள்ளாச்சி, ஜூலை 26: சக ஊழியர் ஒருவரின் இறுதிச் சடங்குக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் லாரியில் இருந்த 23 பேர் படுகாயம் அடைந்தனர். பரம்பிக்குளம் பொதுப்பணித்துறையில் பணிசெய்து வந்த ஊழ

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:36 pm

பா. இளையபதி

பொள்ளாச்சி, ஜூலை 26: சக ஊழியர் ஒருவரின் இறுதிச் சடங்குக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஏற்பட்ட விபத்தில் லாரியில் இருந்த 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

பரம்பிக்குளம் பொதுப்பணித்துறையில் பணிசெய்து வந்த ஊழியர் கோபு என்பவரின் இறுதிச் சடங்குக்கு சக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் பரம்பிக்குளம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். லாரியில் 40 பேர் பயணித்துள்ளனர். மலைப் பாதையில் லாரி சென்றுகொண்டிருந்தபோது, வனவிலங்கு ஒன்று சாலையைக் கடந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் தீடீரென பிரேக் அடித்தார். அப்போது லாரி மலைப் பாதையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் லாரியில் பயணித்த 23 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆனைமலை ஆல்வா மருத்துவமனை, பொள்ளாச்சி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பரம்பிக்குளம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.