ராமநாதபுரம், மே.1: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஊராட்சி ஒன்றியம் களிமண் குன்று கிராமம் வைரவன் என்பவர் ஏப்ரல் 24-ம் தேதி வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது ஐம்பொன்னாலான பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது. இதை அவர் யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். இந்த நிலையில் அவருடன் அஸ்திவாரம் தோண்டிய செல்லப்பா என்பவருக்கு திடீரென அம்மை போட்டுள்ளது.
இதனால் அவர் பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து விஏஓ பாலையாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன்பேரில்
வட்டாட்சியர் அன்புநாதன், துணை வட்டாட்சியர் தமீம், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சிலையை மீட்டு தொல்பொருள் துறையிடம் ஒப்படைத்தனர்.
ஒன்றரை அடி உயரமுள்ள அந்த சிலையின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குடும்ப ஆட்சிக்கு முடிவு; அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்! - எடப்பாடி பழனிசாமி
பிரசாரத்தை நிறைவு செய்தார் இபிஎஸ்!
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
சென்னையில் விஜய் சாலைவலம்!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

