எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருநள்ளாறு கோயிலுக்குள் போட்டோ, விடியோ எடுக்கத் தடை

காரைக்கால், மே 5: திருநள்ளாறு கோயிலுக்குள் போட்டோ, விடியோ எடுக்க  விதித்திருக்கும் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுவதாக கோயில் நிர்வாக  அலுவலர் தெரிவித்தார். ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவில் நிர்வாக அலுவலர் எ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:07 am

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால், மே 5: திருநள்ளாறு கோயிலுக்குள் போட்டோ, விடியோ எடுக்க  விதித்திருக்கும் தடை தீவிரமாக அமல்படுத்தப்படுவதாக கோயில் நிர்வாக  அலுவலர் தெரிவித்தார்.

ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவில் நிர்வாக அலுவலர் எஸ்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை இதுகுறித்து கூறியது:

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோவிலுக்குள் பாதுகாப்பு அம்சம் கருதி போட்டோ, விடியோ எடுக்கத் தடை அமலில் உள்ளது. ஆனால், இதை   தீவிரப்படுத்தாததால் பத்திரிகையாளர்கள், விடியோ கேமராமேன்கள், பக்தர்கள் விதியை மீறி இதுவரை செயல்பட்டு வந்தனர்.

இனிமேல், நிர்வாக அலுவலரிடம் முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட இடத்தில் மட்டும் படம் எடுத்துக் கொள்ளலாம். இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை  நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவின் போது, இதில் விலக்கு அளிக்கப்படுகிறது  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.