தரிசனத்துக்கு 2 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு: காரைககால் வந்த ரதம் ஸ்ரீ நி்த்யகல்யாணப் பெருமாள் கோவில் அருகே நிறுத்தப்பட்டது. முன்னே வந்த பட்டசாரியார்கள், ரதத்தின் கதவு சாவையை கொண்டு வாஞ்சூர் துறைமுகத்துக்கு சென்றுவிட்டனர். இவர்கள் துறைகத்தில் குளியலை முடித்துவிட்டு வருவதற்கு சுமார் 2 மணி நேரமானது. சாவி வந்து கதவு திறந்து பெருமாளை தரிசித்துவிட்டு செல்லலாமென, திரண்டிருந்த பக்தர்கள் கடும் வெயிலையும் பொருள்படுத்தாமல் சாலையிலேயே நின்றனர். பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சாலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருந்தது. திருப்பதியில்தான் காத்திருந்து தரிசிக்கும் நிலையென்றால், காரைக்கால் வந்த பெருமாளை தரிசிக்கவும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக பக்தர்கள் தரப்பில் தெரிவித்தனர்.