திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பரமக்குடியில் 3 பேர் படுகொலை: நடவடிக்கை கோரி சாத்தூரில் ஆர்ப்பாட்டம்

பரமக்குடி அருகே தேவர் குருபூஜைக்கு சென்ற மூன்று பேர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :1 நவம்பர் 2012, 5:12 am

பரமக்குடி அருகே தேவர் குருபூஜைக்கு சென்ற மூன்று பேர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சாத்தூர் அருகே ஏழாயிரம் பண்ணையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்று காலை ஏழாயிரம் பண்ணையில் ஒரு பிரிவைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்டோர் பழைய ஏழாயிரம் பண்ணையில் இருந்து மாரியம்மன் கோவில் பகுதிக்கு பேரணியாகச் சென்று அங்கே ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த பேரணி காரணமாக ஏழாயிரம் பண்ணையில் 400க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் ஏழாயிரம் பண்ணையில் சிவசங்குப்பட்டி, பாண்டியாபுரம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இன்றும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

வேறு அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.