கூடங்குளம் அணு மின் நிலைய விவகாரத்தில் மக்கள், விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை என்றும், விஞ்ஞானிகள், மக்களுக்கு தெரியவில்லை என கூறுகின்றனர். விஞ்ஞானிகளுக்கும், மக்களுக்கும் இடையே விவாதமும், நெருக்கமான தொடர்பு அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் புரிதல் ஏற்படும் என வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 80 வது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:
பசுமை வாயு (Green House Gas) பிரச்சனை இல்லாததால் அணுசக்தி சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகும். அணுஉலை பாதுகாப்பு குறித்து மக்களிடடையே அச்சம் பற்றி சில கருத்துகள் நிலவுகிறது. சமீபத்தில் ஜப்பான் புகுஷிமா அணுஉலை விபத்திற்கு பிறகு அணு உலைக்கு எதிரான கருத்து நிலவுகிறது, அணுசக்திக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அணுக்கழிவு அகற்றுவது குறித்தும், பாதுகாப்பு குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். தொழில்சார்ந்த நிறுவனங்கள் சமுக நலத்திட்டங்களை மேற்கொள்வது போல் பல்கலைக்கழகங்களில் 'பல்கலைக்கழக சமூக பொறுப்புகள்' (University social Responsibilty) என்ற திட்டத்தை தொடங்க வேண்டும். இதன் மூலம் நீர்வளங்களை பாதுகாப்பது, 100 நாள் வேலை திட்டம் தொடர்பான ஆலோசனைகள் வழங்குவது, கணினி சார்ந்த அறிவு மையங்களை ஏற்படுத்துதல் போன்ற சமூக திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தை இந்தியாவின் வளமையான முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் இலக்காக கொண்டு விஷன் 2023 என்ற திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அனைத்து மக்களும் நவீன சமூகத்தின் அடிப்படை வசதிகளை பெற்று சமூக சூழலில் வாழும் நிலை உருவாக்கும் நோக்கில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழில்சார்ந்த அறிவும், அரசியல் ஒத்துழைப்பும் தேவை. 2023 விஷன் திட்டத்தில் தமிழகத்தின் பாரம்பரியமிக்க மகாபலிபுரம், சிதம்பரம் நடராஜர் கோயில், பிச்சாவரம் போன்ற பழமை வளமும், இயற்கை சார்ந்த காடுகளை பாதுகாப்பதும் அம்சமாக உள்ளது. அதற்கு இந்த பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல்துறை பங்களித்துள்ளது பெருமைக்குரியதாகும். சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, பிச்சாவரம் பகுதியில் மாங்குரோவ் காடுகளினால் 2006 டிசம்பரில் ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது அதன் வேகத்தை கட்டுப்படுத்தி சேதத்தை தடுத்துள்ளது. மாங்குரோவ் மருத்துவ குணம் வாய்ந்தது என நிருபிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரம் முற்காலத்தில் தில்லைவணக்காடாக இருந்தது. மாங்குரோவ் செடிகளின் ஒரு பிரிவாக தில்லைமரம் உள்ளது. இந்த தில்லைமரத்தின் முக்கியத்துவம் அறிந்து நடராஜர் கோயில் ஸத்லவிருட்சமாக அப்போதே வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுள்ளது என எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு எதிரொலி: சீனாவில் எரிபொருள் விலை அதிரடியாக உயர்வு!

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
ஈரானை விட்டுவைத்தால் இஸ்ரேல் அழிக்கப்பட்டிருக்கும்: முன்னெச்சரிக்கையாகத் தாக்குதல்! - டிரம்ப்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 5 இடங்கள்!
வீடியோக்கள்

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

