இந்து முன்னணி நிறுவனர் தாணுலிங்க நாடாரின் 24வது நினைவு தினம்
இந்து முன்னணி நிறுவனத் தலைவர் தாணுலிங்க நாடாரின் 24-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


இந்து முன்னணி நிறுவனத் தலைவர் தாணுலிங்க நாடாரின் 24-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கன்னியாகுமரியை அடுத்த பழைய பொற்றையடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குமரி மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர். மாநில இந்து முன்னணி தலைவர் அரசுராஜா, குமரி மாவட்ட தலைவர் சி.செல்லன், துணைத்தலைவர்கள் எஸ்.பி.அசோகன், மணி, செயலர்கள் சுப்பையா, பொன்னப்பன், பொருளாளர் சி.திரவியம், அகஸ்தீசுவரம் ஒன்றிய நிர்வாகிகள் சுரேஷ்குமார், பொன்னையா, செல்வன், சிவா, சிவதாணு, நாகர்கோவில் நகர துணைத்தலைவர் மணி, ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் பால்நாடார், தக்கலை ஒன்றிய தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் மது, தோவாளை ஒன்றிய தலைவர் சுபா முத்து, திருவட்டார் ஒன்றிய தலைவர் ரவி, மேல்புறம் ஒன்றிய தலைவர் கங்காதரன், பொதுச்செயலர் சிபு உள்ளிட்டோர் பங்கேற்று மலரஞ்சலி செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...