டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கே.என்.நேருவின் தம்பி அரிசி ஆலை இடிக்கும் பணி: பதற்றம்

திமுக.,வின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி மணிகண்டனின் அரிசி ஆலை திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள பூ

News image
Updated On :14 அக்டோபர் 2012, 5:47 am

ராஜேஷ்

திமுக.,வின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி மணிகண்டனின் அரிசி ஆலை திருச்சி மாவட்டம் லால்குடி அருகில் உள்ள பூவாளூரில் செயல்பட்டு வருகிறது. இது புறம்போக்கு நிலத்தில், ஆக்கிரமித்துக் கட்டப் பட்டதாக வருவாய்த் துறையினர் கூறியுள்ளனர். இதைஅடுத்து, இன்று அதிகாலை சுமார் 1200 ச.அடி. புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரிசி ஆலையின் கட்டடப் பகுதியை இடிப்பதற்காக 3 பொக்லைன் இயந்திரங்களுடன் வருவாய்த் துறை அதிகாரிகள் லால்குடி கோட்டாட்சியர் தலைமையில் சென்றனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாரும் உடன் சென்றனர்.

ஆனால், இந்த நிலத்துக்குச் சமமான பட்டா நிலம் அரசிடம் அளிக்கப்பட்டதாகவும், அது ஆட்சியரின் பரிசீலனையில் இருப்பதாகவும் கே.என்.நேரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிகாரிகள் அத்துமீறி தங்கள் இடத்துக்குள் புகுந்ததாக ஒரு புகாரை லால்குடி போலீஸில் அளித்தார் அரிசி ஆலை மேலாளர். அதனைப் பெற்றுக் கொண்ட போலீஸார், அரிசி ஆலை மீது அதிகாரிகள் தரப்பில் தங்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பின்னர் அரிசி ஆலை தரப்பில் அளிக்கப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டது.

அரிசி ஆலைக்குள் சுமார் 1 லட்சம் நெல் மூட்டைகள் இருப்பதால், அவற்றை அகற்ற வேண்டியுள்ளது. இது உடனே சாத்தியமில்லை. எனவே கால அவகாசம் அளிக்க வேண்டும். நாங்களாகவே ஆக்கிரமிப்பு சுற்றுச் சுவரை அகற்றிவிடுகிறோம் என்று அரிசி ஆலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அதிகாரிகள் மறுக்கவே, வாக்குவாதம் எழுந்துள்ளது. மேலும், அரிசி ஆலைக்குள் பொக்லைன் இயந்திரத்தை நிறுத்தியுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செய்தி அறிந்து ஏராளமான திமுகவினர் அங்கே குவிந்துள்ளனர். அதிகாரிகள், போலீஸார் தரப்பும் அரிசி ஆலை தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் காலை முதல் லால்குடி பூவாளூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.